Friday, December 17, 2010

வானமும் பூமியும் (2)


மேலும் பல சான்றுகள் :

வான்வெளி கதிரியக்கம்

1965ம் ஆண்டு எர்னோ பென்ஸியஸ் மற்றும் றொபட் வில்சன் ஆகிய இரண்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த அலைகளை தற்செயலாக கண்டுபிடித்தனர். இவை பிரபஞ்ச பின்புற கதிரியக்கம் (கொஸ்மிக் பெக்ரொவ்ண்ட்) என்று அழைக்கப்படுகிறது. இது ஒரு குறிப்பிட்ட ஒன்றிலிருந்து வருவதை போன்று தெரியவில்லை மாறாக அவை பிரபஞ்சம் முழுவதையும் சூழ்ந்து காணப்படுகிறது. இவ்வெப்ப அலைகள் பெரு வெடிப்பின் போது வெளியிடப்பட்டதால் பிரபஞ்சத்தில் அவை சீராக பரவியுள்ளன. பென்ஸியஸ் மற்றும் வில்சன் ஆகிய இருவருக்கும் இந்த கண்டுபிடிப்பிற்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.

1989ம் ஆண்டு நாஸா விஞ்ஞான மையம் கோபே - கொஸ்மிக் பெக்ரவுண்ட் எக்ஸ்புலோரர் (கொஸ்மிக் பெக்ரொவ்ண்ட் எக்ஜ்பொலோரர் (கோபே) ) என்ற செய்மதியை விண்ணுக்கு அனுப்பி பிரபஞ்ச பின்புற கதிரியக்கம் பற்றி ஆராய்ச்சி செய்தது. இந்த செய்மதியிலுள்ள சக்திவாய்ந்த ஸ்கேனர்கள் பென்ஸியஸ் மற்றும் வில்சன் ஆகிய இருவரினதும் கணிப்பீட்டு அளவை உறுதிப்படுத்த வெறும் 8 நிமிடங்களே எடுத்து கொண்டது. இந்த செய்மதி பிரபஞ்சத்திற்கு வெளியே இடம்பெற்ற பெரும் வெடிப்பிற்கு பின்னர் எஞ்சியவைகளை கண்டுபிடித்தது.

வானவியல் வரலாற்றில் பெரும் புரட்சியை ஏற்படுத்திய இந்த கண்டுபிடிப்பு பெரு வெடிப்பு கோட்பாட்டை உறுதிப்படுத்தியது. கோபே செய்மதிக்கு பின்னால் அனுப்பப்பட்ட கோபே 2 என்ற செய்மதியும் பெருவெடிப்பு சம்பந்தமான கணிப்பீடுகளை மீண்டும் உறுதிப்படுத்தியது.

விண்ணிலுள்ள ஹய்ட்ரோஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றின் அளவும் பெருவெடிப்பிற்கு மேலும் வலுவூட்டுகிறது. நவீன கண்டுபிடிப்பின் அடிப்படையில் பெருவெடிப்பின் போது வெளியிடப்பட்டதாக கருதப்படும் ஹய்ட்ரோஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றின் விஞ்ஞான கோட்பாட்டு ரீதியான அளவும் தற்போது பிரபஞ்சத்தில் காணப்படும் ஹய்ட்ரோஜன் மற்றும் ஹீலியம் ஆகியவற்றின் அளவும் சமமாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு தொடக்கம் இல்லாமல் அது நிரந்தரமானதாக இருந்தால் ஹய்ட்ரோஜன் அனைத்தும் உள்வாங்கப்பட்டு அவை அனைத்தும் ஹீலியமாக மாற்றப்பட்டிருக்கும்.

இவ்வாறு அனைத்து சான்றுகளும் விஞ்ஞான சமூகத்தை பெருவெடிப்பு கொள்கை ஏற்று கொள்ள செய்தது. பெருவெடிப்பு கொள்கையானது பிரபஞ்சத்தின் தொடக்கம் பற்றிய விஞ்ஞான சமூகத்தை இறுதி முடிவாகும்.

பல வருடங்களாக பிரட் ஹோய்ளுடன் சேர்ந்து நிரந்தர பிரபஞ்ச திட்டத்திற்கு சார்பாக வாதாடிய சியாமா பெருவெடிப்பு சம்பந்தமாக உண்மைகள் நிரூபிக்கப்பட்ட பின்னர் அவர்களது நிலையை விவரிக்கிறார். நிரந்தர பிரபஞ்ச திட்டத்தை ஆதரித்தவர்களும் அதை எதிர்தவர்களுக்கும் இடையே நடைபெற்ற விவாதங்களில் தான் கலந்து கொண்டதாக கூறுகிறார். மேலும் அவர் தான் நிரந்தர பிரபஞ்ச திட்டத்தை உண்மையென நம்பி வாதாடவில்லை என்றும் மாறாக அது உண்மையாக இருக்க கூடும் என்று நினைத்தே வாதாடியதாக குறிப்பிடுகிறார். இந்த கோட்பாட்டுக்கு எதிராக அனைத்து சான்றுகளும் நிரூபிக்கப்பட்ப போதிலும் பிரட் ஹோய்ல் அனைத்தையும் மறுத்தார். சியாமா மேலும் கூறுகிறார்இ அவர் முதலில் பிரட் ஹோய்லுக்கு சார்பாக இருந்ந போதும் சான்றுகள் குவிய தொடங்கியவுடன் இந்த விளையாட்டு முடிந்தது என்பதை உணர்ந்து நிரந்தர பிரபஞ்ச திட்டமானது நிராகரிக்கப்பட வேண்டிய ஒன்று என்பதை ஏற்று கொண்டதாக கூறுகிறார்.

கலிபோனியா பல்கலைகழகத்தை சேர்ந்த பேராசிரியர் ஜோர்ஜ் ஏபல் என்பவர் பெருவெடிப்பின் காரணமாக பிரபஞ்சம் பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவானது என்பதை நவீன விஞ்ஞான உண்மைகள் காட்டுகின்றன என்கிறார். தனக்கு வேறு எந்த வழியும் இல்லாததன் காரணமாக பெருவெடிப்பு கொள்கையை ஏற்று கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறுகிறார்.

பெருவெடிப்பு கொள்கையின் வெற்றியின் காரணமாக நாத்திக சிந்தனைகளுக்கு ஆதாரமாக இருந்த நிரந்தர பொருள் என்ற வாதம் வரலாற்றின் குப்பை கூடைக்குள் வீசப்பட்டது. அடுத்து ஒன்றுமில்லாத நிலையில் பெருவெடிப்பை ஏற்படுத்தி பிரபஞ்சத்தை உருவாக்கிய சக்தி எது ? இந்த வினா ஆர்தர் எடிங்டன் கருத்துகளில் பிரதிபளிக்கிறது. காரணம் இறைவன் இருக்கிறான் என்பது நாத்திகர்களுக்கு 'சித்தாந்த ரீதியில் வெறுக்க' கூடிய உண்மைமயாகும். இந்த கருத்து சம்பந்தமாக பிரபல்யமான நாத்திகர் அன்டனி பிளிவ் கூறுகையில் :

ஏற்றுகொள்வது ஆன்மாவிற்கு நல்லது. ஆகவே நான் நவீன வானவியல் உண்மைகளை நாத்திகர்கள் ஏற்றுகொள்ள வேண்டும் என்பதை நான் வலியுறுத்துகிறேன். பிரபஞ்சதிதிற்கு தொடக்கம் உண்டு என்பது போன்ற புனித தோமஸினால் தத்துவரீதியில் நிரூபிக்க முடியாத கருத்துகளை வானவியலின் உதவி கொண்டு விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. பிரபஞ்சத்திற்கு தொடக்கமும் முடிவும் இல்லை என்பது அதன் முக்கியமான அடிப்படை அம்சங்களாக கருதப்படுபவைகளும் விதிவிலக்கின்றி இறுதி முடிவாக கருதப்பட் வேண்டும். இவைகளை ஏற்று கொள்ள இலகுவானது. இவைகள் இன்றும் உண்மையென்றே கருதுகிறேன். ஆனால் பெருவெடிப்பை பொருத்தவரை இவ்வாறு ஏற்று கொள்வது இலகுவானதல்ல.

நாத்திகத்தை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்ளாத பல விஞ்ஞானிகள் பிரபஞ்சம் படைக்கப்பட்டதில் எல்லாம் வல்ல இறைவன் பங்கை ஏற்று கொள்கின்றனர். நேரத்தையும் பொருளையும் படைத்த இந்த இறைவன் இவ்விரண்டிலுமிருந்தும் தனித்து செயல்பட கூடியவன். ஹக் ரோஸ் (Hugh Ross) என்ற பிரசித்தி பெற்ற வானியல் அறிஞர் கூறுகிறார்:

பிரபஞ்சத்தினது தொடக்கத்தோடு; நேரமும் தொடங்கியிருந்தால் நேரத்தில் தொழிற்பட கூடிய ஆனால் முற்றிலும் தன்னிச்சையாக செயல்பட கூடியதும் வானவியலின் நேர வரையறைக்கு முன்பிருந்த ஒன்றுதான் காரணமாக இருந்திருக்க வேண்டும். இறைவன் எவ்வாறு இருக்க வேண்டும் - எவ்வாறு இருக்க கூடாது என்ற முடிவுக்கு வர இந்த முடிவு மிக முக்கியமானதாகும். இந்த முடிவு இறைவன் பிரபஞ்சம் இல்லை என்றும் அல்லது பிரபஞ்சத்திற்குள் இறைவன் இல்லை என்பதையும் நமக்கு உணர்துகிறது.

நேரத்தையும் பொருளையும் படைத்த இறைவன் அனைத்து சிந்தனைகளிலிருந்தும் சுதந்திரமானவன். இந்த படைப்பாலன் அல்லாஹ், அவன் தான் வானங்களினதும் பூமிகளினதும் இறைவன்.

விண்ணில் காணப்படும் அசாதாரணமான சமநிலை

உண்மையில் அன்டனி பிளிவ்வின் நம்பிக்கையை விட பெருவெடிப்பு கோட்பாடே நாத்திகர்களை பெரிதுதம் சங்கடப்படுத்தியது. பெருவெடிப்பு கொள்கை ஒன்றுமில்லதா நிலையிலிருந்து பிரபஞ்சம் படைக்கப்பட்டது என்பதை மட்டும் நிரூபிக்கவில்லை இ மாறாக அவை சிறந்த முறையில் திட்டமிடப்பட்டு உருவாக்கப்பட்டது என்பதையும் கூறுகிறது.

பிரபஞ்சத்தின் அனைத்து பொருட்களும் சக்திகளும் ஒன்று திரட்டப்பட்டிருந்த ஓரிடத்தில் இடம் பெற்ற பெரும் வெடிப்பின் காரணமாக அவை அனைத்தும் பயங்கர வேகத்தில் விண்ணில் பரத்தப்பட்டன. இந்த பொருள் மற்றும் சக்தியை கொண்டு உருவான பால்வெளி மண்டலங்கள் (
galaxies)நட்சத்திரங்கள், சூரியன், பூமி மற்றும் அனைத்து விண்ணிலுள்ள வகைகளும் அந்தரத்தில் நிறுத்தப்பட்டன. மேலும் முழு பிரபஞ்சத்திற்கும் ஓரே மாதிரியான மாறாத கணிப்பீடுக, ள் 'பௌதீகவியல் சட்டங்கள்' என்ற பெயரில் உருவாக்கப்பட்டன. பெருவெடிப்பின் பின்னர் சீரான ஓழுங்கு ஒன்று ஏற்பட்டுள்ளதை இவை சுட்டிக்காட்டுகின்றன.

வெடிப்பு ஒருபோதும் சீரான ஓழுங்கை கொண்டு வராது. வெடிப்புகள் அனைத்தும் தீங்கு செய்வதாகவும் தற்போதுள்ளதை அழித்து சிதைத்து விடக்கூடியதாகவும் இருப்பதை நாம் அன்றாடம் காண்கிறோம். உதாரணமாக அணுகுண்டு - நெருப்பு வெடிப்புகள் - எரிமலை வெடிப்பு - இயற்கை வாயு வெடிப்பு - இவை அனைத்தும் அழிக்கும் தன்மை கொண்டது.

வெடிப்பின் பின் ஏற்பட்ட விளைவுகளை பற்றி விளக்குவதானால் - உதாரணத்திற்கு இ பூமிக்கடியில் ஏற்பட்ட ஒரு வெடிப்பின் காரணமாக ஒரு கலைப்படைப்பு அல்லது பெரும் மாளிகை அல்லது வியக்கத்தக்க ஒரு வீடு உருவானால் - இதற்கு பின்னால் ஒரு பெரும் சக்தி ஒன்று இருந்து வெடிப்பினால் வீசப்பட்ட துண்டுகளை சீராக ஓழுங்குபடுத்தி நகர்தியுள்ளது என்ற முடிவிற்கு வரலாம்.

பிரட் ஹோய்ல் பல வருடங்கள் பெருவெடிப்பு கொள்கையை கடுமையாக எதிர்த்து பின்னர் இறுதியில் அவரது பிழைகளை ஒப்புக்கொண்டார். இதை பற்றி அவர் கூறும்போது :

பெருவெடிப்பு கொள்கையானது பிரபஞ்சம் ஒரு பெரும் வெடிப்பின் காரணமாகவே தோன்றியது என்கிறது. வெடிப்பு எப்பொழுதும் பொருளை அப்பால் வீசுவது வழக்கம் ஆனால் பெருவெடிப்பானது எதிர்விளைவை உருவாக்கியது புதிராக இருக்கிறது. அதாவது பொருட்கள் சேர்ந்து பால்வெளி மண்டலங்களாக (
galaxies) இணைந்தது.அவர் பெருவெடிப்பின் தன்மை எதிர் மாறானது என்று கூறிவிட்டு பெருவெடிப்பை நாத்திகத்திற்கு சார்பாக அது 'கட்டுப்படுத்த முடியாத வெடிப்பு' என்று வர்ணிக்கிறார். அவர் இறைவனை மறுக்கும் நோக்கிலேயே தனக்கு தானே முரண்பட்டு கொள்கிறார். பெருவெடிப்பின் காரணமாக பெரும் சீரான ஓழுங்கு ஒன்று ஏற்படுமானால் 'கட்டுப்படுத்த முடியாத வெடிப்பு' என்ற வாதம் புறக்கணிக்கப்பட்டு அந்த வெடிப்பு 'வியக்கதக்க வகையில் கட்டுப்படுத்தப்பட்டது' என்ற வாதம் ஏற்று கொள்ளபட வேண்டும்.

பெருவெடிப்பின் மூலம் வாழக்கூடிய இடமாக பிரபஞ்சம் உருவாக்கப்பட்டது மற்றொரு அதிசயமாகும். வாழ்வதற்கு ஏற்ற பூமியாக உருவாக பல காரணிகளும் அவை சிக்கலானதுமாக இருப்பதால் இவ்வாறு உருவானது நிச்சயமாக தற்செயலான ஒன்றல்ல.

பௌதீகவியலில் பிரபல்யமான போல் டேவிஸ் பெருவெடிப்பின் பின்னர் பிரபஞ்சம் எவ்வாறு விரிவாக்கப்பட்டது என்பதை கணக்கிட்ட போது அவர் அதிசயமான முடிவை பெற்றார். டேவிஸின் கணக்குப்படி பெருவெடிப்பிற்கு பிறகு பிரபஞ்சம் விரிவடைந்து செல்லும் வீதம் பத்து லட்சத்தை பத்து லட்சத்தால் பெருக்கி அதில் வரும் விடையில் ஒரு பங்கு வித்தியாசமடைந்தாலும் உயிர் வாழக்கூடிய எந்த ஒரு நட்சத்திரமும் உருவாகியிருக்காது. கவனமான நுணுக்கமான அளவில் பிரபஞ்சம் விரிவடைந்து செல்வதால் பிரபஞ்சம் தனது ஈர்ப்பிலிருந்து தப்பித்து விரிவடைகிறது.

சற்று வேகம் குறைந்தாலும் விண்ணிலுள்ளவைகள் ஒன்றோடு ஒன்று மோதி கொள்ளும்: சிறிதளவு வேகம் கூடினாலும் விண்ணிலுள்ளவைகள் என்றோ காணாமல் போயிருக்கும். ஆகவே அபாயகரமான இரண்டை பிரிக்கும் இந்த கோட்டில் விரிவடைந்து செல்லும் வீதம் எவ்வாறு துள்ளியமாக வரையறுக்கபட்டுள்ளது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஒரு நேரத்தில் விரிவடையும் வீதம் உண்மையான விரிவடையும் அளவிலிருந்து 10-18 வீதம் வித்தியாசப்பட்டாலும் இந்த அசாதாரண டியடயnஉந மறைந்து போக போதுமானதாகும். பிரபஞ்ச வெடிப்பின் சக்தி அதன் ஈர்ப்பு சக்தியோடு ஆச்சர்யமான நம்பமுடியாத முறையில் ஒத்து போகிறது. பெருவெடிப்பு என்பது சாதாரண வெடிப்பன்று மாறாக துள்ளியமாக அளவிடப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வெடிப்பாகும்.

பெருவெடிப்போடு உருவான பௌதீக சட்டங்கள் 15 பில்லியன் ஆண்டுகளாக மாறவே இல்லை. மேலும் கணிப்பீடுகளிலுள்ள சட்டங்கள் படி தற்பொதுள்ள அளவில் ஒரு மில்லிமீட்டர் வித்தியாசம் ஏற்பட்டாலும் பிரபஞ்சத்தின் முழு செயல்பாடும் அழிந்து போய்விடும்.

புகழ்பெற்ற பௌதீகவியளாளர் பேராசிரியர் ஸடீபன் ஹோகின்ஸ் அவரது அ பிரிவ்ப் ஹிஸ்டரி ஒப் டைம் என்ற புத்தகத்தில் பிரபஞ்சம் எம்மால் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு துள்ளியமாக கணக்கிடப்பட்டு சிறப்பாக ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது என்று குறிப்பிடுகிறார். ஹோகின்ஸ் பிரபஞ்சம் விரிவாகும் வீதத்தை விளக்குகிறார்:

பிரபஞ்சத்திலுள்ள ஒன்று மற்றவற்றிலிருந்து வலகி அதிசயத்தக்க விரிவாகும் சதவீதத்தால் விரிவாகிக் கொண்டு போவதால், இன்றும், ஏன் பத்து ஆயிரம் ஆண்டுகளுக்கு பிறகும் இதே வீதத்தில் விரிவாகிக் கொண்டே போகும். பெருவெடிப்பின் ஏற்பட்ட பிறகு பிரபஞ்சம் விரிவாகும் சதவீதம் நூறு ஆயிரம் மில்லியன் மில்லியன் என்ற கணக்கில் ஒரு பகுதி என்ற சிறு விகிதத்தில் வித்தியாசப்பட்டிருந்தாலும் இருந்தாலும் இன்றைய நிலையை அடைய முன்னர் பிரபஞ்சம் அழிந்து போயிருக்கும்.

போல் டேவிஸ் இந்த சீரான அதிசயத்தக்க துள்ளியமான கணக்கீட்டின் விளைவுளை விளக்குகிறார் :

தற்போதய பிரபஞ்சத்தின் அமைப்பானது சிறிய வித்தியாசம் ஏற்பட்டாலும் அதன் விளைவு மோசமாக இருக்கும், இவை மிக கவனமாக சித்திக்கப்பட்டு………….இயற்கை தனது அடிப்படையானவைகளுக்கு வகுத்துள்ள அதிசயமான எண்களின் பெறுமதியானது வானவியல் அமைப்பின் அடிப்படை சான்றுகளாகும்.

இந்த உண்மை சம்பந்தமாக, அமேரிக்க வானவியல் பேராசிரியர் ஜோர்ஜ் கிறின்ஸ்டன் அவரது த சிம்போலிக் யுனிவர்ஸ் என்ற நூலில் எழுதுகிறார் :

நாம் அனைத்து சான்றுகளையும் கவனமாக ஆராயும் போது இ பல பெரும் சக்திகள் - அல்லது ஒரு பெரும் சக்தி கண்டிப்பாக ஈடுபட்டுள்ளது என்று தோன்றுகிறது.

பொருள் படைக்கப்படல்

பெருவெடிப்பின் பிறகு அணு உருவானது. பின்பு இந்த அணுக்கள் ஒன்று சேர்ந்து நட்சத்திரங்களாக சூரியனாக பூமியாக உருவானது. அதன் பிறகு இதே அணுக்கள் உலகில் உயிரினங்களை உருவாக்கியது : உங்கள் உடல், நீங்கள் உட்கார்ந்திருக்கும் நாற்காலி, உங்கள் கையிலுள்ள புத்தகம், ஜன்னலினூடாக நீங்கள் பார்க்கும் வானம் - மணல்- கான்கிரீட் - பழங்கள் - தாவரங்கள் - அனைத்து உயிருள்ளவைகள் மற்றும் உங்களால் கற்பனை செய்யக்கூடிய அனைத்தும் - அணுக்கள் ஒன்று சேர்ந்ததின் விளைவாக உருவானது.

அப்படியென்றால் அணு என்பது என்ன? அதன் அமைப்பு எவ்வாறு உள்ளது ?

நாம் அணுவின் அமைப்பை ஆராய்ந்து பார்தால் அவை அனைத்தும் வியப்பளிக்க கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டு ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளதை பார்கலாம். ஒவ்வொரு அணுவின் மையத்திலும் கரு ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு அணுவின் கருவிலும் நியுட்ரோன் மற்றும் போர்டோன் என்ற இரண்டு துகள்கள் இருக்கின்றன. இதற்கு மேலாக இ கருவிலுள்ள சில நியுட்ரோன்கள் கருவிற்குள் ஒரு நிமிடத்திற்கு 1000 கிலோமீட்டர் என்ற வேகத்தில் தொடர்நது சுற்றிக்கொண்டிருக்கிறன.

ஒரு அணுவில் இலத்திரோன்களும் போர்டோன்களும் சம அளவில் காணப்படுகின்றன. காரணம் எதிர் கொண்ட இலத்தரோன்களும் நேர் கொண்ட போர்டோன்களும் அசாதாரண சமநிலை செய்கிறது. இவற்றின் ஒன்றின் எண்ணிக்கையில் குறைவு ஏற்பட்டாலும் அதன் இலத்திரனியல்ஈர்ப்பில் மாற்றம் ஏற்பட்டு அணு என்ற ஒன்று இருக்காது. ஒரு அணுவில் கருவில் காணப்படும் நியுட்ரோன் மற்றும் போர்டோன்களும் அதணை சுற்றியுள்ள இலத்திரன்களும் எப்பொழுதும் இயங்கி கொண்டே இருக்கும். இவை தன்னை தானே சுற்றிக் கொண்டு மற்றதோடும் குறிப்பிட்ட கால அளவில் சிராக சுழல்கிறது. அதன் வேகம் மற்றதன் வேகத்தோடு சமமாக இருப்பதன் காரணமாக அணுவை உயிருள்ளதாக இருக்கிறது. அதில்; ஒழுங்கு அல்லது வேற்றுமை அல்லது மாற்றம் என்றும் நிதழ்வதில்லை.

இத்தகைய உயர்ந்த ஒழுங்கு படுத்தப்பட்ட ஒன்று - ஒன்றுமில்லாத நிலையிலிருந்து பெருவெடிப்பின் காரணமாக உருவானது என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. பெருவெடிப்பானது கட்டுப்படுத்தப்படாத தற்செயலானது என்றால் அதனை தொடர்ந்த பல விடயங்களும் அதனால் உருவானவைகளும் பெரும் குழப்பத்தின் காரணமாக மறைந்து போயிருக்கும்.

உண்மையில் படைப்பின் ஆரம்பத்திலிருந்தே எல்லா நிலைகளிலும் துள்ளியமான ஒழுங்கு ஒன்று காணப்படுகிறது. உதாரணமாக அணுக்கள் வௌ;வேறு இடங்களிலும் வௌ;வேறு நேரங்களிலும் இணைக்கப்பட்ட போதிலும் அவை துள்ளியமாக ஒழுங்குபடுத்தபட்டுள்ளதை பார்க்கும் போது அவை ஒவ்வொன்றினதும் வகை பற்றியும் அறிந்துள்ள ஒரே ஒரு தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டது என்று தோன்றுகிறது. முதலில் இலத்தரன்கள் கருவை அறிந்து கொண்டு அவற்றில் வலம் வர ஆரம்பிக்கின்றன. பின்பு அணுக்கள் ஒன்று சேர்ந்து காரணமுள்ள அர்த்தமுள்ள பொருட்களாக உருவெடுக்கின்றன. வீணான பயனற்ற காரணமற்ற பொருட்கள் உருவாவதே இல்லை. சிறிய முதல் மிகப்பெரும் படைப்புகள் வரை அனைத்தும் ஒழுங்குபடுத்தப்பட்டு பல பயனுடையதாக உருவாகிறது.

இவை அனைத்தும் இறைவன் இருக்கிறான் என்பதற்கான வலுவான ஆதாரங்களாகும். அவை அனைத்தும் அவன் விரும்பும் நேரத்தில் உருவாகின்றன. அல்லாஹ் குர்ஆனில் அவனது படைப்புகளை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறான் :

அவன் தான் வானங்களையும் பூமியையும் உண்மையாகவே படைத்தான்¢ அவன் 'ஆகுக!" என்று சொல்லும் நாளில், அது (உடனே) ஆகிவிடும். அவனுடைய வாக்கு உண்மையானது¢ எக்காளம் (ஸூர்) ஊதப்படும் நாளில், ஆட்சி (அதிகாரம்) அவனுடையதாகவே இருக்கும்¢ அவன் மறைவானவற்றையும், பகிரங்கமானவற்றையும் அறிந்தவனாக இருக்கிறான்¢ அவனே பூரண ஞானமுடையோன், (யாவற்றையும்) நன்கறிந்தோன (அன்ஆம்: 73)

பெருவெடிப்பிற்கு பிறகு

பிரபஞ்சத்தின் ஆரம்பம் பற்றி நீண்ட ஆராய்ச்சி செய்த பௌதீகவியளாளர் ரோஜர் பென்ரோஸ் பிரபஞ்சம் தற்செயலான ஒன்றல்ல மாறாக அதற்கு நிச்சயமாக நோக்கம் இருக்கிறது என்ற உண்மையை கூறுகிறார் சிலர் 'பிரபஞ்சம் இருக்கிறது' என்றும் அவை எங்கோ போகிறது - இவற்றுக்கு மத்தியில் நாம் சிக்கி கொண்டோம் என்று நினைக்கிறார்கள். இந்த மனப்பான்மை பிரபஞ்சத்தை பற்றி அறிவதற்கு உதவாது. பென்ரோஸ் மேலும் கூறுகையில்இ பிரபஞ்சத்திற்குள் மேலும் பல விடயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அவற்றை எம்மால் அறிந்து கொள்ள முடியாது.

ரோஜர் பென்ரோஸின் எண்ணங்கள் சிந்திக்கப்பட வேண்டியவை. பிரபஞ்சத்தின் துள்ளிய கணிப்பீடுகள் இருப்பதற்கு எத்தகைய காரணமும் இல்லை என்றும் அவர்கள் இந்த பிரபஞ்சத்தில் வாழ்வது வீண்விளையாட்டுக்காக என்றும் பலர் தவறாக நினைக்கிறார்கள்.

இருப்பினும் விஞ்ஞான சமூகத்தால் பிரபஞ்சம் உருவாக தேவையானது என்று கருதப்படும் பெருவெடிப்பிற்கு பிறகு வந்த சீரான துள்ளியமான ஒழுங்கை (
order)) சாதாரணமான ஒரு செயல் என்று சிந்திக்க முடியாது

சுருக்கமாக கூறுவதானால் பிரபஞ்சத்திலுள்ள வியப்பான நடைமுறைகளை ஆராய்ந்து பார்த்தால் பிரபஞ்சத்தின் ஆரம்பம் மற்றும் அது அசாதாரணமாக சிக்கலான டியடயnஉந மற்றும் ஒழுங்கில் இயங்கிகொண்டிருத்தல் போன்றவை விளக்குவதற்கு சிக்கலாக இருப்பது காணக்கூடியதாக இருக்கிறது. பெரும் வெடிப்பின் பின்னர் இத்தகைய சிக்கலான டியடயnஉந மற்றும் ஒழுங்கு ஆகியவைகள் உருவானது தற்செயலாக என்று கருத முடியாது. பெரும் வெடிப்பின் பின்னர் இத்தகைய ஒழுங்கு ஏற்பட காரணம் ஒரு அசாதாரண படைப்பால் மாத்திரம் முடியும்.பிரபஞ்சத்தில் காணப்படும் இந்த நிகரற்ற திட்டமும் ஒழுங்கும் நிகரற்ற ஞானம் அறிவு சக்தியடைய இறைவன் இருக்கிறான் என்பதை உறுதியாக நிரூபிக்கிறது. அவனே ஒன்றுமில்லாத நிலையில் பொருளை படைத்து அதை கட்டுப்படுத்துகிறான். இந்த படைப்பாளன் அல்லாஹ்

, வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையிலுள்ள அனைத்திற்கும் இறைவன்.

இந்த உண்மைகள் 19ம் நூற்றாண்டில் நிலவிய நாத்திக தத்துவங்களை 20ம் நூற்றாண்டில் அழித்துவிட்டது.

பிரபஞ்சத்தில் நிலவும் சீரான திட்டம் மற்றும் அதன் அமைப்புகைள அறிவிப்பதன் மூலம் படைப்பாளன் இருக்கிறான் என்றும் அவனே அனைத்தையும் படைத்து நிர்வகிக்கிறான் என்று நவீன விஞ்ஞானம் நிரூபித்துள்ளது. அவன்தான் அல்லாஹ்.

பல நூற்றாண்டுகளாக பல மக்கள் விஞ்ஞானம் என்ற போர்வையில் அனைத்தும் பொருளால் ஆனது என்று கூறி ஒன்றுமில்லாத நிலையிலிருந்து பொருளை படைத்து அதை நிர்வகிக்கும் அல்லாஹ_ இருக்கிறான் என்பதை மறுத்தது பெரும் தவறை செய்து விட்டனர். ஒருநாள் வரலாற்றில் இயற்கை நியதி தத்துவங்கள் என்பது விஞஞானத்திற்கும் பகுத்தறிவிற்கும் எதிரானது மூடநம்பிக்கை என கருதப்படும நிலை ஏற்படும்..

No comments:

Post a Comment