Thursday, February 3, 2011

ஞானம் தரும் வாக்தேவி


அனைத்து உயிர்களின் நாவிலும் கலைமகளே வீற்றிருப்பதாக கந்தபுராணம் கூறுகிறது. இதனால் நாவுக்கரசி என்றொரு பெயர் உண்டு. இதனை கந்தசஷ்டி கவசத்துதியில், "" நாவில் சரஸ்வதி நற்றுணையாக...'' என்று தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். தாய் தன் பிள்ளைகளுக்கு பாலூட்டி வளர்ப்பது போல, பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானத்தை அருளும் ஞானப்பூங்கொடி இவளே. வாக்கு, சொல் ஆகியவற்றுக்கு சரஸ்வதியே அதிபதியாக விளங்குவதால் வாக்தேவி என்றும், வித்தைகளை அருள்பாலிப்பவள் என்பதால் வித்யா சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறாள். கலைமகளை வழிபடுவோர் நவமி நாளிலோ அல்லது மூலநட்சத்திரத்தன்றோ வழிபாடு செய்வது சிறப்பு. அதிலும் புரட்டாசியில் வரும் நவமியை சரஸ்வதிக்குரிய தினமாக மகாநவமி என்று கொண்டாடி மகிழ்கிறோம்.

No comments:

Post a Comment