Skip to main content

தேனீ‌க்களை‌ப் ப‌ற்‌றி அ‌றிவோ‌ம்

பூ‌வி‌ன் மகர‌ந்த‌த்‌தி‌ல் இரு‌ந்து தேனை உ‌றி‌ஞ்‌சி அவ‌ற்றை தே‌ன் கூடுக‌ளி‌ல் சேக‌ரி‌த்து வை‌க்கு‌ம் அ‌ரிய செயலை செ‌ய்யு‌ம் தே‌னீ‌க்க‌ளை‌ப் ப‌ற்‌றிய ஒரு க‌ட்டுரை இது.

பொதுவாக உல‌கி‌ல் அ‌திக அள‌வி‌ல் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட இன‌ம் பூ‌ச்‌சி இனமாகு‌ம். இ‌ந்த பூ‌ச்‌சி இன‌ங்‌க‌ளி‌ல் ம‌னிதனு‌க்கு ப‌ல்வேறு பா‌தி‌ப்புகளை ஏ‌ற்படு‌த்து‌ம் இன‌ங்களே அ‌திக‌ம். ஆனா‌ல் ம‌னிதனு‌க்கு பய‌ன்படு‌‌ம் தேனை உ‌ற்ப‌த்‌தி செ‌ய்து, ப‌ல்வேறு நோ‌ய்களு‌‌க்கு மரு‌ந்தாக இரு‌க்கு‌ம் தேனை அ‌ளி‌க்கு‌ம் தே‌னீ‌‌க்க‌ள், ஈ வகையை‌ச் சே‌ர்‌ந்தவையாகு‌ம்.

தே‌னீ‌க்க‌ள் ஆ‌ப்‌ரி‌க்கா‌வி‌ல் தோ‌ன்‌றியு‌ள்ளன. அ‌‌ப்படியே ஒ‌வ்வொரு க‌ண்டமாக‌ப் பர‌வி த‌ற்போது பூ‌மி‌யி‌ல் அ‌ன்டா‌ர்டிகாவை‌த் த‌விர ம‌ற்ற அனை‌த்து‌ப் பகு‌திக‌ளிலு‌ம் பர‌வி வா‌ழ்‌‌ந்து வரு‌கி‌ன்றன.

தே‌னீ‌க்க‌ளி‌ல் ரா‌ணி‌த் தே‌னி, ஆ‌ண் தே‌னி, வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்க‌ள் என மூ‌ன்று வகைக‌ள் உ‌ள்ளன. இவை ஒ‌வ்வொ‌ன்று‌ம் ஒ‌வ்வொரு உட‌ல் அமை‌ப்பை‌ப் பெ‌ற்று‌ள்ளன எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

இ‌ந்த மூ‌ன்று தே‌னீ‌க்க‌ளி‌ன் கூ‌ட்ட‌ணியா‌ல் உருவாவதுதா‌ன் தே‌ன் கூடாகு‌ம். பொதுவாக ஒ‌வ்வொரு உ‌யி‌ரின‌த்‌திலு‌ம் ஆ‌ண், பெ‌ண் எ‌ன்ற வே‌ற்றுமையை உண‌ர்‌த்து‌ம் உட‌ல் உறு‌ப்பு ‌வி‌த்‌தியாச‌ம் ம‌ட்டுமே இரு‌க்கு‌ம். ஆனா‌ல், தே‌‌னீ‌க்க‌ளி‌ல் ம‌ட்டு‌ம் மூ‌ன்று வகையான உட‌ல் அமை‌ப்புக‌ள் உ‌ள்ளன.

ஒரு தே‌ன் கூடு எ‌ன்றா‌ல் ரா‌ணி‌த் தே‌‌னீ ஒ‌ன்றே ஒ‌ன்றுதா‌ன் இரு‌க்கு‌ம். ஆ‌ண் தே‌னீ‌க்க‌ள் நூ‌ற்று‌க்கண‌க்‌கிலு‌ம், வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்க‌ள் ஆ‌யிர‌க்கண‌க்‌கிலு‌ம் இரு‌க்கு‌ம். இரா‌ணி‌த் தே‌னீ ம‌ற்ற இரு வகை தே‌னீ‌க்களை ‌விட அள‌வி‌ல் பெ‌ரியதாக இரு‌க்கு‌ம். கூடுக‌ளி‌ல் இரு‌க்கு‌ம் ம‌ற்ற எ‌ல்லா தே‌னீ‌க்களு‌க்கு‌ம் இதுதா‌ன் தாயாகு‌ம்.
ரா‌ணி‌த் தே‌னி‌க்கு கொ‌ட்ட‌க் கூடிய கொடு‌க்குக‌ள் உ‌ள்ளன. இவை ‌மீ‌ண்டு‌ம் ‌‌மீ‌ண்டு‌ம் வளரு‌ம் த‌ன்மை கொ‌ண்டவை. ஆனா‌ல் ஆ‌ண் தே‌னீ‌க்களு‌க்கு கொடு‌க்குக‌ள் இ‌ல்லை. அதே சமய‌ம் வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்களு‌க்கு ‌விழு‌ந்து‌வி‌ட்டா‌ல் ‌‌மீ‌ண்டு‌ம் முளை‌க்காத கொடு‌க்குக‌ள் உ‌ள்ளன.

ஆ‌ண் தே‌னீ‌க்க‌ள் இரா‌ணி‌த் தே‌னீயுட‌ன் உறவு கொ‌ண்டவுட‌ன் உ‌யி‌ரிழ‌ந்து‌விடு‌ம். இரா‌ணி‌த் தே‌னீ மு‌ட்டை‌யி‌லிரு‌ந்து முழு வள‌ர்‌ச்‌சி அடை‌ந்து ‌பிற‌க்க 16 நா‌ட்க‌ள் ஆ‌கி‌ன்றன. ஆனா‌ல், ஆ‌‌ண் தே‌னீ‌க்க‌ள் ‌பிற‌க்க 24 நா‌ட்களு‌ம், வேலை‌க்கார‌த் தே‌னீ‌க்க‌ள் ‌பிற‌க்க 21 நா‌ட்களு‌ம் ஆ‌கி‌ன்றன.

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

ஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்

ஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். ...

Amazing Oranges~~simply superb