அனைத்து உயிர்களின் நாவிலும் கலைமகளே வீற்றிருப்பதாக கந்தபுராணம் கூறுகிறது. இதனால் நாவுக்கரசி என்றொரு பெயர் உண்டு. இதனை கந்தசஷ்டி கவசத்துதியில், "" நாவில் சரஸ்வதி நற்றுணையாக...'' என்று தேவராய சுவாமிகள் குறிப்பிடுகிறார். தாய் தன் பிள்ளைகளுக்கு பாலூட்டி வளர்ப்பது போல, பக்குவ ஆன்மாக்களுக்கு ஞானத்தை அருளும் ஞானப்பூங்கொடி இவளே. வாக்கு, சொல் ஆகியவற்றுக்கு சரஸ்வதியே அதிபதியாக விளங்குவதால் வாக்தேவி என்றும், வித்தைகளை அருள்பாலிப்பவள் என்பதால் வித்யா சரஸ்வதி என்றும் அழைக்கப்படுகிறாள். கலைமகளை வழிபடுவோர் நவமி நாளிலோ அல்லது மூலநட்சத்திரத்தன்றோ வழிபாடு செய்வது சிறப்பு. அதிலும் புரட்டாசியில் வரும் நவமியை சரஸ்வதிக்குரிய தினமாக மகாநவமி என்று கொண்டாடி மகிழ்கிறோம்.
அறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன . மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும் . மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும். நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ...
Comments
Post a Comment