Skip to main content

மனிதர்களின் அற்ப ஆயுள்!



மனிதர்களின் அற்ப ஆயுள்!

ஒரு முறை தேவ சிற்பியான விஸ்வகர்மாவிடம் இந்திரன், பதினான்கு உலகங்களிலும் இப்படி ஒரு மாளிகை இல்லை என்று சொல்லும்படியாக மிகச்சிறந்ததும் மிகப் பெரியதுமாக ஒரு மாளிகை கட்ட வேண்டும் என உத்தரவிட்டான் விஸ்கர்மாவும் தன் உதவியாளர்களுடன் மாளிகை கட்ட தயாரானார். இந்திரனின் விருப்பப்படி மாளிகை கட்ட வேண்டியிருந்ததால், பல தேவ வருடங்கள் ஆகியும் விஸ்வகர்மாவால் அப்படி ஒரு மாளிகையை கட்டி முடிக்க முடியவில்லை. விஸ்வகர்மாவும் அவரது உதவியாளர்களும் களைத்து போயினர். நொந்து போன இந்திரன் என்ன செய்வது என சிந்தித்து கொண்டிருக்கும். வேளையில், சாகா வரம் பெற்ற லோமசர் என்ற மகரிஷி அங்கு வந்தார். அவருக்கு உடம்பெல்லாம் ரோமங்கள் இருந்ததால் லோமசர் என்று பெயர். இவருக்கு இடுப்பில் சிறு துணியும் தலையில் ஒரு பாய் மட்டுமே சொத்து. அவரைப் பார்த்து இந்திரன், மகரிஷி ! பாயை எதற்கு தலைக்கு மேலே விரித்தாற் போல் வைத்திருக்கிறீர்கள் ? எனக் கேட்டான். அதற்கு லோமசர், இந்த உடலோ வீணானது. இதைக் காப்பாற்றுவதற்கு ஒரு வீடு கட்ட வேண்டுமா என்ன ? இந்த உடலை வெப்பத்திலிருந்தும், மழையிலிருந்தும் காப்பதற்காக தலையின் மேல் பாயை வைத்துள்ளேன், என்றார். எதிர்பார்க்காத இந்த பதிலை கேட்டு அதிர்ந்த இந்திரன், சிரஞ்சீவியான தாங்களா தங்கள் உடலை வீண் என்கிறீர்கள் ?

அதற்கு மகரிஷி, சிரஞ்சீவியாக இருந்தாலும் என் உடலும் ஒரு நாள் போக வேண்டியது தானே ? என் உடம்பிலுள்ள அத்தனை ரோமங்களும் உதிர்ந்ததும் இந்த உடல் அழிந்து விடும். என் மார்பு பகுதியை பார்... அதில் காசு அளவுக்கு ரோமம் உதிர்ந்து விட்டது. இத்தனைக்கும் என் ரோமம் உதிர்வதற்கு அதிக காலம் ஆகும் என நினைக்க வேண்டாம். ஒவ்வொரு பிரம்மா மறையும் போதும் உன் உடலிலிருந்து ஒரு ரோமம் உதிர்ந்து விடுகிறது. பிரம்மாவின் ஆயுட்காலம் என்பது பதினாறு இந்திரர்களின் ஆயுட் காலம் சேர்ந்தது பிரம்மாவின் ஒரு நாள். அப்படி 365 நாளானால், பிரம்மாவுக்கு ஓராண்டு. அப்படி நூறு ஆண்டுகள் சேர்ந்தது பிரம்மாவின் ஆயுள். இப்படியே ஒவ்வொரு ரோமமாக என் உடலிலிருந்து அனைத்து ரோமங்களும் உதிர்ந்ததும் என் ஆயுள் முடிந்துவிடும். இந்த அற்ப ஆயுளுக்காகவா என்னை வீடு கட்டி கொள்ள சொல்கிறாய் ? என்றார் மிகச் சாதரணமாக. மீண்டும் அதிர்ந்தான் இந்திரன். மகரிஷி லோமசரின் ஆயுட்காலத்தோடு ஒப்பிடும் போது தன் ஆயுட்காலமானது மிகவும் அறபத்தனமானது என்பதை இந்திரன் எண்ணிப்பார்த்தான். உடனே அந்த பெரிய மாளிகை கட்டும் திட்டத்தை அப்படியே விட்டுவிட்டான். நாம் வாழ்வதோ கொஞ்ச காலம் தான் அதில் பணம், பொருள் என சேர்க்காமல் புண்ணியத்தை மட்டும் சேர்ப்போம்

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத

அபிமன்யுவின் வீரம்!

அபிமன்யுவின் வீரம்! சிறுவன் ஒருவன் சாதனைகளைச் செய்ய முடியுமா? நிச்சயமாய் முடியும். அபிமன்யுவின் வரலாறை படிக்கும் குழந்தைகள் பெரும் சாதனையாளர்களாக மாறுவார்கள். அர்ஜூனனின் மனைவி சுபத்ரா. துவாரகை மன்னன் பலராமன், கண்ணன் ஆகியோரின் தங்கை. அவளுக்கு ஆனைப்பட்டணம் என்ற ஊரை சீதனமாக அளித்தார் பலராமன். சுபத்ரா கர்ப்பமாக இருந்த நேரத்தில் அண்ணன் கண்ணனிடம் போர் முறைகளைப் பற்றி கேட்டாள். கண்ணன் சொல்ல ஆரம்பித்தார். எப்படியெல்லாம் போரில் யூகங்கள் வகுக்கப்படும், அதிலிருந்து எப்படியெல்லாம் வீரர்கள் தப்புவார்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தார். அவரது விளக்கம் சுபத்ராவுக்கு போரடித்து விட்டது போலும். உம் கொட்டிக் கொண்டே கேட்டுக் கொண்டிருந்தவள் அப்படியே தூங்கி விட்டாள். ஆனால் உம் சத்தம் மட்டும் வந்து கொண்டே இருந்தது. சுபத்ராவின் வயிற்றில் இருந்த குழந்தை தான் அது.போர் முறைகளைப் பற்றிக் கவனமாகக் கேட்டுக் கொண்டே உம் கொட்டியது. கண்ணன் அப்போது சக்ர வியூகம் பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். அதை அமைக்கும் வி

Magadheera (2009) - Dheera Dheera HQ song