Skip to main content

அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம், தாலாஸ்,அமெரிக்கா



தலவரலாறு : டெக்சாசின் ஃபிரிஸ்கோ பகுதியில் உள்ள தாலாசில் அமைந்துள்ள அழகிய ஆலயம், அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம் ஆகும். பரம பூஜ்ய ஸ்ரீ சுவாமிஜி தாலாஸ் மற்றும் ஹோஸ்டன் பகுதியில் உள்ள சட்சாங் குழுவினரை 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி சந்தித்து, தத்தா கோயில் கட்டுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். பின்னர் அப்பகுதியிலுள்ள பக்தர்களின் உதவியுடன் தாலாஸ் பகுதியில் நிலம் பெறப்பட்டு அருள்மிகு காரிய சித்தி ஹனுமன் ஆலயம் கட்டப்பட்டது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பா கண்டத்திலேயே முற்றிலும் கல்லால் உருவாக்கப்பட்ட ஒரே ஆலயம் இதுவாகும். சுவாமிஜியின் அரிய முயற்சியால் 2007ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆலயம் அமைப்பதற்காக நிலம் தேடும் பணி துவங்கப்பட்டது. இப்பணி செப்டம்பர் மாத இறுதி வரை தொடர்ந்தது. பின்னர் தாலாஸ் பகுதியில் பெறப்பட்ட நிலம் 2008ம் ஆண்டு ஜனவரி மாதம் விலைக்கு வாங்கப்பட்டது. வேகமாக முன்னேறி வந்த நகரங்களில் ‌ஒன்றான ஃபிரிஸ்கோ பகுதியில் இக்கோயில் அமைக்கப்பட்டது. குடியிறுப்பு பகுதியின் மையத்தில் அமைந்துள்ள இக்கோயிலுக்கு மிக அருகில் தேவாலயமும், பள்ளியும் இருப்பது தனிச்சிறப்பானதாகும்.

வாகனங்கள் நிறுத்தும் இடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய சுமார் 10,000 சதுரடியில் அமைந்த கோயில் 2008ம் ஆண்டு செப்டம்பர் மாதம் கட்டப்பட்டது. கோயிலின் கட்டுமானப் பணிகள் நடைபெற்ற போது மெட்ரோபிளக்ஸ் பகுதியில் பக்தர்களால் எளிமையான முறையில் ஹனுமன் வழிபாடு நடத்தப்பட்டு வந்தது. பக்தர்களின் பல ஆண்டுகால கோரிக்கைக்கு பிறகு சுவாமிஜியால் ஜெய்பூரில் இருந்து இளஞ்சிவப்பு நிறத்தாலான ஹனுமன் சிலை புதிய ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய பிரத்யேகமாக வரவழைக்கப்பட்டது. அத்துடன் 2008ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 11ம் தேதியன்று முதல் ஹனுமன் ஜெயந்தி விழாவன்று 5 அடி உயர ஹனுமன் சிலை ஒன்று கோயிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 3ம் தேதியன்று ஹனுமன் கலாச்சார மையத்துடனான ஸ்ரீ காரிய சித்தி ஹனுமன் ஆலயத்தின் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. ஆஷாத சுக்ல ஏகாதசி அன்று கும்பாபிஷேக விழா நடத்தப்பட்டதால், அன்று முதல் ஏகாதசி தினமும் சிறப்பாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது. 2009ம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதியன்று ஹனுமன் கலாச்சார மையத்தில் ஹனுமன் விக்ரஹத்தின் பிரன்ன பிரதிஷ்டை விழா நடைபெற்றது.

ஆலய நேரங்கள் : திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரையும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் ஆலயம் திறந்து வைக்கப்படுகிறது. வாரத்தின் இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுகிழமையிலும், தேசிய விடுமுறை நாட்களிலும் காலை 9.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக ஆலயம் திறக்கப்படுகிறது.

ஆலய முகவரி : Karya Siddhi Hanuman Temple,

12030 Independence, Pkwy, Frisco, Texas - 75035

இ-மெயி்ல் : info@dallashanuman.org

தொலைப்பேசி : (866) 996-6767

இணையதளம் : http://www.dallashanuman.org

Comments

Popular posts from this blog

ஆழ்வார்கள் பற்றிய தகவல்கள்

பொய்கையாழ்வார் பிறந்த ஊர் : காஞ்சிபுரம் பிறந்த நாள் : 7ம்நூற்றாண்டு நட்சத்திரம் : ஐப்பசி திருவோணம் (வளர்பிறை அஷ்டமி திதி) கிழமை : செவ்வாய் எழுதிய நூல் : முதல் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : பொற்றாமரை பொய்கையில்அவதரித்தவர், திருமாலின் சங்கின் அம்சம். பூதத்தாழ்வார் பிறந்த ஊர் : மகாபலிபுரம் பிறந்த நாள் : 7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : அவிட்டம், (ஐப்பசி வளர்பிறை நவமி திதி) கிழமை : புதன் எழுதிய நூல் : இரண்டாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : குருக்கத்தி மலரில் பிறந்தவர், திருமாலின் கதாயுத அம்சம். பேயாழ்வார் பிறந்த ஊர் : மயிலாப்பூர் பிறந்த நாள் : ஏழாம் நூற்றாண்டு நட்சத்திரம் : சதயம் (ஐப்பசி வளர்பிறை தசமி திதி) கிழமை : வியாழன் எழுதிய நூல் : மூன்றாம் திருவந்தாதி பாடல்கள் : 100 சிறப்பு : செவ்வல்லி மலரில் பிறந்தவர், திருமாலின் வாளின் அம்சம் திருமழிசையாழ்வார் பிறந்த ஊர் : திருமழிசை (காஞ்சிபுரம் அருகில்) பிறந்த நாள் : கி.பி.7ம் நூற்றாண்டு நட்சத்திரம் : மகம் (தேய்பிறை பிரதமை திதி) கிழமை : ஞாயிறு தந்தை : பார்க்கவ முனிவர் தாய் : கனகாங்கி எழுதிய நூல் : நான்முகன் திருவந்தாதி, திருச்சத ...

ஆண்டாளின் திவ்ய சரிதம் - திருப்பாவை விளக்கம்

ஆண்டாள் அருளியது பாடல் 1 மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்! சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச்சிறுமீர்காள் கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம் கார்மேனிச் செங்கண் கதிர்மதியம் போல் முகத்தான் நாராயணனே நமக்கே பறை தருவான் பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய் பொருள்: அழகிய அணிகலன்களை அணிந்த கன்னியரே! சிறப்பு மிக்க ஆயர்பாடியில் வசிக்கும் செல்வவளமிக்க சிறுமிகளே! மார்கழியில் முழுநிலா ஒளி வீசும் நல்ல நாள் இது. இன்று நாம் நீராடக் கிளம்புவோம். கூர்மையான வேலுடன் நம்மைப் பாதுகாத்து வரும் அரிய தொழிலைச் செய்யும் நந்தகோபன், அழகிய கண்களையுடைய யசோதாபிராட்டி ஆகியோரின் சிங்கம் போன்ற மகனும், கரிய நிறத்தவனும், சிவந்த கண்களை உடையவனும், சூரியனைப் போல் பிரகாசமான முகத்தையுடையவனும், நாராயணனின் அம்சமுமான கண்ணபிரான் நமக்கு அருள் தர காத்திருக்கிறான். அவனை நாம் பாடிப் புகழ்ந்தால் இந்த உலகமே நம்மை வாழ்த்தும். விளக்கம்: இந்த பாசுரத்தை ஆண்டாள் வைகுண்டத்தை மனதில் கொண்டு பாடுகிறாள். அதனால் தான் "நாராயணனே பறை தருவான் என்கிறாள். ...

மச்சங்களைப் பற்றி அறிவியல் அறிஞர்கள் !

அறிவியல் அறிஞர்கள் இறந்து போன சிவப்பணுக்களின் வெளிப்பாடு என்று மச்சத்தைப் பற்றிச் சொல்கிறார்கள் . ஆனால் ஜோதிடத்தைப் பொறுத்தவரை மச்சங்கள் முக்கிய இடம் வகிக்கின்றன . மேல் உதடு மற்றும் கீழ் உதடுகளில் இருக்கும் மச்சங்கள் சர்வ சாதாரணமாகப் பொய் பேச வைக்கும் . மச்சங்களில் உள்ளங்கையில் இருக்கும் மச்சம் மிக முக்கியமானதாகும். எல்லா நல்ல கெட்ட பலன்களையும் உடனடியாக அளிக்கக் கூடியது இந்த உள்ளங்கை மச்சம். சில ஆபத்துக்களையும் உருவாக்கும். சுண்டு விரலில் புதன் மேட்டில் மச்சம் இருந்தால் கல்வித் தடைபடும். கூடா நட்பு உண்டாகும். கூட்டு சேர்வது சரியாக இருக்காது. மோதிர விரலுக்கு கீழே இருக்கும் சூரிய மேட்டில் மச்சம் இருந்தால் அரசால் கண்டம் ஏற்படும். அதாவது ஜெயிலுக்குப் போவது போன்ற நிலை உண்டாகும். நடு விரலில் மச்சம் இருந்தால் திடீர் மரணம்இ கடத்தப்படுதல்இ தீரா நோய் கோர மரணம் ஊரை விட்டு ஒதுக்கப்படுவது உண்ணா நோன்பு இருந்து இறப்பது போன்றவை ஏற்படும். ஆட்காட்டி விரலுக்கு கீழே குரு மேட்டில் மச்சம் இருந்தால் சர்வ சாதரணமாக நீதி நெறியை மீறுதல் குரு பத்னியை தொட்டுவிடுதல் போன்றவற்றில் ...